ஜப்பானில் எதிர்வரும் நாட்களில் மீண்டும் நில அதிர்வு ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வாரம் ஜப்பானின் தென் பகுதியில் உள்ள கியூஷு தீவு அருகே 7.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியிருந்தது.
இதன்காரணமாக ஜப்பானின் வர்த்தக நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதுடன், சுற்றுலாத்துறையும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.