வீடுகளுக்குள் நுழைந்து குளியலறைக்குள் கமரா ?

0
7

யாழில் வீடுகளுக்குள் நுழைந்து குளியலறைக்குள் கமரா பொருத்தி காணொளிகளை எடுத்து வீட்டாரை மிரட்டி வந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் இ யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த மாவட்ட குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here