நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு இலவச காப்புறுதி வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் 06 வகையான பயிர்களுக்கு இலவச விவசாயக் காப்புறுதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி நெல், மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, சோளம், சோயா போன்ற பயிர்களுக்கு இலவச காப்புறுதி வழங்கப்பட்டுள்ளது.