இலங்கை மின்சாரச் சபையினால் முன்மொழியப்பட்டுள்ள மின் கட்டண திருத்தம் மற்றும் இலங்கை மின்சாரச் சபையின் அண்மைய நிதிநிலை அறிக்கையின் அடிப்படையிலான பகுப்பாய்விற்கமைய, தற்போதைய மின்சாரக் கட்டணத்தை 20 முதல் 25 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் மின்சாரக் கட்டணத்தைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது