நாளை மீண்டும் பணிப்புறக்கணிப்பு!

0
4

நாட்டில் உள்ள 72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் நாளை(2024.02.13) காலை 6 மணிமுதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாகச் சுகாதாரத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் தொடர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகச் சுகாதாரத் தொழிற்சங்கங்களினது கூட்டமைப்பின் இணைப்பாளர் சானக்க தர்மவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியர்களுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here