பெரும் பணக்காரர்களைப் பொலிஸார் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. “யுக்திய” என்றழைக்கப்படும் தேசிய குற்றத்தடுப்பு உத்தியானது திடீரென்று செல்வந்தர்களாக மாறுபவர்கள் மீது கவனம் செலுத்துகிறது. திடீரெனப் பணக்காரர்களாக மாறிய பலரை பொலிஸார் தேடி வருவதாகப் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
சுமார் 50,000 சந்தேக நபர்களைக் கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்படும் வரை தந்திரோபாயத் தேடுதல்கள் தொடரும் எனப் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.