மட்டக்குளிய பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையன்போது, கழிவு கால்வாயில் பாய்ந்து தப்பிக்க முற்பட்ட ‘குடு ராணி’ என அழைக்கப்படும் 45 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கழிவு கால்வாயில் பாய்ந்த குறித்த பெண்ணைக் கடும் பியரத்தனத்துக்கு மத்தியிலேயே பொலிஸார் கைது செய்துள்ளனர். விசேட பொலிஸ் குழுவொன்றும் வரவழைக்கப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சம் பெறுமதியான போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாரால் குறித்த பெண்ணின் மட்டக்குளி கதிரானவத்தைப் பகுதியிலுள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போதே பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற பெண் அருகிலுள்ள கழிவு கால்வாயில் பாய்ந்துள்ளார்.