இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகை நடவடிக்கைகளுக்காகக் காலி வீதியின் சில பகுதிகள் மூடப்படவுள்ளதாகக் காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, காலி வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தி முதல் காலி முகத்திடல் வரையான பகுதியும் செரமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரையிலான பகுதியும் பல கட்டங்களின் கீழ் நாளை மறுதினம் முதல்; பெப்ரவரி மாதம் 2ஆம் திகதிவரை மூடப்படவுள்ளது. இதன்படி குறித்த பகுதிகள் இந்தக் காலப்பகுதியில் காலை 6 மணிமுதல் 8.30 வரையிலும் முற்பகல் 11 மணிமுதல் மதியம் 12 மணி வரையிலும் மூடப்படவுள்ளன.

அத்துடன், பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி பிற்பகல் 2 மணி முதல் சுதந்திர தினம் நிறைவடையும் வரையில் காலி வீதியின் குறித்த பகுதிகள் மூடப்பட்டிருக்கும் எனக் காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here