கேப்டன் ஆனார் எம்.எஸ்.தோனி !

0
3

பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு ரசிகர்களால் மாபெரும் வரவேற்பை பெற்ற IPL தொடரைக் கொண்டாடும் விதமாக இத்தனை ஆண்டுகளாக விளையாடிய வீரர்களை வைத்து புதிய அணி ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த அணியைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான வாசிம் அக்ரம், மேத்யூ ஹைடன், டாம் மூடி மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோர் இடம்பெற்றனர். அவர்களைத் தவிர்த்து கிட்டத்தட்ட 70 பத்திரிகையாளர்களும் இந்த அணியைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். IPL தொடரின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 16 பேர் கொண்ட அணிக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், முன்னாள் இந்திய கேப்டனுமான மகேந்திர சிங் தோனி கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், விராட் கோலி, கிறிஸ் கெயில், டேவிட் வோர்னர், டி வில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, பொல்லார்ட், ரஷீத் கான், சுனில் நரேன், யுஸ்வேந்திர சஹால், லசித் மாலிங்க மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இந்த அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here