இணக்கப்பாடின்றி நிறைவடைந்த கலந்துரையாடல்!

0
3

கொடுப்பனவுகள் தொடர்பில் சுகாதார அமைச்சருடன் சுகாதாரத் தொழிற்சங்க பிரதிநிதிகள் மேற்கொண்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த கொடுப்பனவு தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நாளைய தினம் சுகாதார அமைச்சருடன் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் எட்டப்படும் முடிவினை பொறுத்துப் பணிப்புறக்கணிப்பை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here