ஈரானில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புகளில் 103 பேர் பலியாகினர். 141 பேர் காயமடைந்துள்ளனர். கெர்மன் பகுதியில் ஈரான் முன்னாள் தளபதி காசிம் சுலைமானின் கல்லறை அருகே தொடர் குண்டுவெடிப்பு நடந்தது.காசிம் சுலைமானின் நினைவு தினத்தை முன்னிட்டு பெருந்திரளான மக்கள் திரண்டிருந்த போது இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.