பாட்டியை கொலை செய்த பேரனின் மனைவி!

0
6

அத்கால, உலப்பனே பகுதியில் வயதான மூதாட்டி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இக்கொலை நேற்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உலப்பனை பிரதேசத்தில் வசிக்கும் 78 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண் தனது பேரன் அவருடைய மனைவி மற்றும் அவர்களது 2 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகப் பேரனின் மனைவி இந்தக் கொலையைச் செய்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொலை நடைபெறும் போது குறித்த நபர் வீட்டில் இல்லை எனப் பின்னர்த் தெரியவந்ததுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்காலப் பொலிஸார் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here