ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர். குறித்த சுற்றிவளைப்பில், விபச்சார விடுதியை நடத்தி வந்த நான்கு முகாமையாளர்கள் உட்பட விபச்சாரத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், முற்றுகையிடப்பட்ட விபச்சார விடுதி அந்தப் பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.