டெல்லியில் இருந்து வாரணாசிக்கு கிளம்பும் விமானம் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக இறக்கி விடப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்றப்படுத்தியது. இந்நிலையில் விமான பணியாளர்கள் விமானத்தின் கழிவறையில் BOMB என எழுதப்பட்ட Tissue Paper-ஐ கண்டெத்துள்ளனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் விமானத்தில் எந்த ஒரு வெடி பொருளும் இல்லை எனவும், இது ஒரு ஏமாற்று வேலை எனவும் சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.