பொலிஸ் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று முற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான பாதுகாப்புப் பணிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் தேர்தல் விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று பங்கேற்கவுள்ளனர்.
அதேநேரம் தேர்தல் சட்ட மீறல்களைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.