அக்குரஸ்ஸ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் தம்பதியர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 38 வயதுடைய நபரும் அவரது 32 வயது மனைவியும் உயிரிழந்துள்ளனர்.
விபத்துத் தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.