14 வயது பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்!

0
3

அநுராதபுரத்தில் உள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரேயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில், குறித்த சிகையலங்கார நிலையத்தின் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த இரண்டு சந்தேகநபர்களைத் தவிர, மேலும் 11 சந்தேகநபர்களின் பெயர்களைச் சிறுமி வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. அவர்களில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் 70 வயதுடைய தந்தை ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தரம் 9இல் கல்வி பயிலும் குறித்த சிறுமி, கரப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், எல்லே உள்ளிட்ட போட்டிகளில் தேசிய மட்டத்தில் பங்குபற்றி வெற்றியீட்டியவர் எனக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here