இந்தியாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் அமைந்துள்ள அரச மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் திருமணத்திற்கு முன் படப்பிடிப்பு நடத்திய வைத்தியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதில் குறித்த வைத்தியர் அறுவை சிகிச்சை செய்வது போலவும், அவருக்கு மணப்பெண் உதவுவது போலவும், அறுவை சிகிச்சை முடிந்ததும் நோயாளி எழுந்து அமர்வது போலவும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். அத்துடன் இதனைச் சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.
இந்தநிலையில் வைத்தியரின் குறித்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.