சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் சுரங்கப்பாதையில் நின்றிருந்த மெட்ரோ ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 102 பயணிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதுடன் 500க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.
ரயில் விபத்து தொடர்பாக முதற்கட்ட விசாரணையில், தண்டவாளத்தில் பனி படர்ந்திருந்ததால் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலுடன், வழியில் வந்த மற்றொரு ரயில், நிருத்த முயன்றும் நிற்காமல் மோதியது தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் உயிரிழப்புகள் இல்லை எனினும், ரயிலில் பயணித்தவர்களுக்கு படுகாயமடைந்துள்ளது.