நேற்று (19.12.2023) யாழ்ப்பாணம் வடமராட்சி – துன்னாலை கிழக்கு பகுதியில் 51 வயதான பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது ஆடைக்குள் ஆறு கிராம் (g) அளவுள்ள ஹெரோயினை மறைத்து வைத்திருந்த நிலையில் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நாளை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here