தெற்கு அரசியலில் வெகுவிரைவில் கட்சி தாவல்கள் சூடுபிடிக்கும் எனச் சிங்கள வார இதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கான பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன எனவும்,கட்சிதாவும் காலப்பகுதி பற்றி ஆராயப்பட்டுவருகின்றது எனவும் தெரியவருகின்றது.
இதன்படி ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே தாவல்கள் பெருமளவில் இடம்பெறக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கியத் தேசிய கட்சி மற்றும் அரசுடன் இணையவுள்ளனர்.
அதேபோல ஆளுங்கட்சி பக்கம் உள்ள 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள்வரை ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமிக்கவுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
அத்துடன், சர்வஜன அதிகாரம் பக்கமும் சில எம்.பிக்கள் செல்லவுள்ளனர். மேலும் சிலர் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.