ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று (08.02.2024) ஆரம்பமாகவுள்ளது. குறித்த விவாதம் இன்று காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை நடைபெறவுள்ளதாகப் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விவாதம் நாளையும் நடைபெறவுள்ளது.
இதன்போது அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் உள்ள முன்மொழிவுகள் விவாதம் இன்றி நிறைவேற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.