இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்

0
9

மேஷம் 

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். அம்பிகையை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்க, நற்பலன் அதிகரிக்கும்.

ரிஷபம் 

உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மகாலட்சுமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மிதுனம்

சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.உங்கள் சிரமம் அறிந்து உங்கள் பொறுப்புகளை மற்றவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

கடகம் 

தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும். நண்பர்களின் சந்திப்பும், அவர்கள் மூலம் எதிர்பாராத ஆதாயமும் உண்டாகும். புதிய முயற்சியை காலை யிலேயே தொடங்குவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.

சிம்மம் 

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். கடன் வாங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. தாயின் உடல்நலனில் அக்கறை காட்டவும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம். இன்று நீங்கள் துர்கையை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் பெரிதும் குறையும்.

கன்னி 

புதிய முயற்சி சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமாக முடிந்துவிடும். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படும். சிவபெருமானை வழிபட காரியங்கள் அனைத்தும் சித்தியாகும்.

துலாம்

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு தெய்வ வழி பாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

விருச்சிகம்

எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். கூடியவரை இன்று புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற் பட்டு நீங்கும். குடும்பப் பெரியவர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். இன்று நீங்கள் துர்கையை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

தனுசு 

மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக் கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. நீண்டநாளாகத் தொடர்பில் இல்லாத நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள். ஆஞ்சநேயரை தியானித்து இன்றைய நாளைத் தொடங்குவது சிறப்பு.

மகரம்

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும். சிலருக்கு பிள்ளைகளால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் வீண் பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியும்.

கும்பம்

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். இன்று பைரவர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

மீனம்

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். தாய்மாமன் வழியில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் காரியத்தடைகள் விலகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here