ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உக்ரைன் பாதுகாப்பு தரப்பினரின் தாக்குதல் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
உக்ரைன் படையினர் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துவதனால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தப் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த பகுதிக்கு ஏனைய நகரங்களிலிருந்து வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் எல்லைத்தாண்டி உக்ரைன் பாதுகாப்பு தரப்பினர் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் தாக்குதலை ஆரம்பித்தனர்.
இது ஆத்திரமூட்டும் செயற்பாடு என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் விமர்சித்துள்ளார்.