காதலனின் பிறப்புறுப்பை வெட்டிய காதலி!

0
8

இந்தியாவின் பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தனது காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அப்பெண்ணின் மீது கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

காதலன் சிகிச்சைக்காகப் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதலன் மதுரா தொகுதியில் உள்ள வார்டு எண். 12ன் கவுன்சிலர் ஆவார்.

கடந்த 5 ஆண்டுகளாக அந்த நபருடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகவும் ஆனால் அவர் தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் கூறினார்.

இதனால் நீதிமன்றத்தில் பதிவுத் திருமணத்திற்குக் காதலன் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, காதலி திருமணத்திற்காக நீதிமன்றத்தை அணுகி ஏற்பாடுகளைச் செய்த போதும் காதலன் வரவில்லை.

அதன் பிறகு, காதலனை தனது வீட்டிற்கு வரவழைத்த காதலி, அங்கு வைத்து அவரது அந்தரங்க உறுப்பை வெட்டியதாகத் தெரிகிறது.

இதனால் வலியால் துடித்த காதலனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் படுக்கையில் கிடப்பதை கண்டு பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கைதானவர், ஹாஜிபூரைச் சேர்ந்த 25 வயதான பயிற்சி மருத்துவர் ஆவார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here