தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மூத்த தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவு நிகழ்ந்து மணித்தியாலங்கள் கடந்துள்ளன.
எனினும் இந்த மணித்தியாலங்கள் நாட்களாக, மாதங்களாக, வருடங்களாகக் கடக்கும் போது இலங்கை தமிழர்கள் மத்தியில் தலைமைத்துவத்துக்குப் பாரிய வெற்றிடம் ஒன்று வெகுவாக உணரப்படும்.
இந்த வெற்றிடத்தைச் சம்பந்தன், சுகயீனமடைந்துள்ள நிலையிலேயே காணக்கூடியதாக இருந்தது.
ஒரு தலைமை சரியானதை செய்கிறதோ? அல்லது தவறு செய்கிறதோ? என்பதைக்காட்டிலும் தமக்குக் கீழுள்ள உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தி வைக்கும் ஆளுமையே தலைமையின் இலட்சணமாகக் கருதப்படுகிறது
அந்த இலட்சணத்தை ஆர் சம்பந்தன் கொண்டிருந்தார்.
இதன் காரணமாக,இலங்கையின் அரசாங்கங்களும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கின.
எனினும் தற்போது அந்தச் சூழ்நிலை தலைகீழாக மாறியுள்ளது கூட்டமைப்பு சிதறியுள்ளது. தமிழரசுக்கட்சி சிதறியுள்ளது. இது தமிழ் மக்களையும் சிதறடித்துள்ளது.
இறுதியில் இன்று தமிழ் மக்களின் அபிலாசைகளையும் இறையாண்மையையும் சுயநிர்ணய தெரிவையும் சிதறடிக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
எனவே இரா. சம்பந்தனின் மறைவு நிகழ்ந்துள்ள இந்தத் தருணத்தில் கூடத் தமிழ் தலைமைகள் ஒன்றுபடவேண்டும் என்பதைத் தமிழ் மக்களின் தயவான கோரிக்கையாக உள்ளது.
இல்லையேல் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டு வந்த தமிழர் போராட்ட வரலாறு மறைந்துப்போய் விடும் வரலாறாக மாறிவிடும்