ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக அறிவிக்கப்பட்ட 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் இணைத்துக் கொள்ளுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுன கடந்த வாரம் ஜனாதிபதிக்கு மீண்டும் அறிவித்துள்ளது.
அவ்வாறு இணைத்துக் கொள்ள முடியாத பட்சத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தனி வேட்பாளர் ஒருவரை முன்வைக்கும் என்றும் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.