எதிர்வரும் ஜூன் 26ஆம் திகதி அரச பாடசாலை ஆசிரியர்கள் சுகவீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசாங்கம் உறுதியளித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், கல்விப் பொதுத் தராதரப்பத்திர பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்தும் விலகவுள்ளதாக, ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அன்றைய தினம் மாணவர்கள் பாடசாலை செல்வதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.