கெப்பெட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (9) மரக்கறிகளின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி கடந்த நாட்களில் 100 ரூபாவிற்குக் குறைவாக விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகள் இன்று 400 ரூபாவைக் கடந்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் மரக்கறிகளின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.