இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டியில் இந்தியா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 16 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 97 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்திய அணி சார்பில் அதன் தலைவர் Rohit Sharma அதிகபட்சமாக 52 ஓட்டங்களைப் பெற்றார்.