நாளை மற்றும் நாளை மறுதினங்களில் அனைத்து பாடசாலைகளிலும் வழமை போன்று கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குத் தயாராகி வரும் பின்னணியில் கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.