80 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள்!

0
6

2ஆம் உலகப் போரில் ஜப்பானின் பல போர்க் கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவு 80 ஆண்டுகளுக்குப் பின்னர்த் தென் சீனக் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘யு.எஸ்.எஸ் ஹார்டர்’ என்ற குறித்த கப்பல் எதிரிப் படைகளால் மூழ்கடிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸின் வடக்கு தீவான லூஸானை ஒட்டிய கடற்பகுதியில் 3,000 அடிக்குக் கீழே குறித்த நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1944ஆம் ஆண்டு ஓகஸ்ட் 29ஆம் திகதி 79 பேருடன் ‘ஹார்டர்’ கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

2ஆம் உலகப் போரின் போது, ‘ஹார்டர்’ 4 நாட்களில் 3 ஜப்பானியப் போர்க் கப்பல்களை மூழ்கடித்ததாகவும், 2 கப்பல்களைப் பெருஞ் சேதத்திற்கு உள்ளாக்கியதாகவும் அமெரிக்கக் கடற்படை தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here