கோர விபத்தில் மூன்று இளம் இளைஞர்கள் பலி!

0
7

புஸ்ஸ பிந்தாலிய ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் உயிரிழந்த மூன்று இளைஞர்களும் 17 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெசாக் அலங்காரங்களைப் பார்வையிடச் சென்ற போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். உயிரிழந்த மூவரும் உறவினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த இளைஞர்கள் கெக்கில்லமண்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here