பாலியல் புகார் தொடர்பான வழக்கில் நர்சிங் அதிகாரி ஒருவரை கைது செய்ய மருத்துவமனையின் 4-வது தளத்திற்குள் ஜீப்பில் புகுந்த காவல்துறையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் நர்சிங் அதிகாரி சதீஷ்குமார் என்பவர் அதே மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவருக்குத் தவறான வீடியோக்களை அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்தப் பாலியல் வழக்கு தொடர்பாகச் சதீஷை கைது செய்வதற்காக நான்காவது தளத்திற்கு ஜீப்பில் சென்றுள்ளனர் உத்தரகாண்ட் பொலிஸ், அவசர சிகிச்சை பிரிவுக்குள் ஜீப்பில் புகுந்த இவர்கள் வேகவேகமாகச் சென்று அவரைக் கைது செய்து இழுத்து செல்கின்றனர்.
இந்த வீடியோ தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.