முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய அனைத்து அரச குடியிருப்புகள் மற்றும் விடுதிகளை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்குப் பொது நிர்வாக அமைச்சு எழுத்து மூலம் இதனை அறிவித்துள்ளது.
சுமார் 15 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஏற்கனவே அரச குடியிருப்புகள் மற்றும் விடுதிகளை ஒப்படைப்பது குறித்து விசாரணை நடத்தியதாக அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.