ஒலிம்பிக் பதக்கத்துடன் சென்ற வீரர்களுக்கு வந்த வினை!

0
3

பாரிஸில் நடைபெற்ற 2024 ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளின் போது பதக்கத்தை வென்ற வட கொரிய வீரர்கள் தென்கொரிய வீரர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்ததால் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேசைப்பந்து போட்டியின் இரட்டையர் பிரிவில் வடகொரிய வீரர்கள் ரி ஜோங் சிக், கிம் கும் யோங் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

குறித்த வெற்றியின் பின்னர் இருவரும் தென் கொரிய வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

போட்டிக்கு முன்னதாகவே வட கொரிய வீரர்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் வட கொரியா திரும்பியுள்ள குறித்த மேசைப்பந்து வீரர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here