தாய்லாந்து பிரதமர் பதவியில் இருந்து நீக்கம்!

0
3

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேதா தவிசினை பதவியில் இருந்து நீக்கி அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டு நீதிபதி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற சம்பவம் தொடர்பில் சிறைச்சாலையில் இருந்து விடுதலையான சட்டத்தரணி ஒருவர் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஸ்ரேதா தவிசின், நெறிமுறைகள் மீதான விதிகளைத் தீவிர நடத்தையுடன்” மீறியதாக அரசியலமைப்பு நீதிமன்றம், தீர்ப்பளித்துள்ளது.

67 வயதான ஸ்ரேத்தா, ஓராண்டுக்கும் குறைவான காலமே ஆட்சியில் இருந்துள்ளதுடன், 16 ஆண்டுகளில் இதே நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட மூன்றாவது பிரதமர் ஆவார்.

புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தாய்லாந்து பாராளுமன்றம் கூடும் வரை அவருக்குப் பதிலாக இடைக்காலத் தலைவர் நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here