சம்பந்தனின் இடத்தை கோருகிறார் அடைக்கலநாதன்!

0
6

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகச் செல்வம் அடைக்கலநாதனை நியமிக்குமாறு கோரி, ஏனைய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு டெலோ எனப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

அதன் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

நாடாளுமன்றக் குழுத் தலைவராக மறைந்த இரா.சம்பந்தன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுக் கடந்த 23 வருடங்களாகச் செயற்பட்டிருந்தார்.

இந்தநிலையில், அவரது மறைவுக்குப் பின்னர்த் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகச் செல்வம் அடைக்கலநாதனை நியமிப்பதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் கோவிந்தன் கருணாகரம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த கடிதத்தின் பிரதிகள் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here