இலவச விசா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போது 38 நாடுகளுக்கு இலவச விசாவுடன் இலங்கைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்நாட்டின் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கு இது மிகவும் நல்ல முடிவாக இருக்கும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.