வைத்தியசாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

0
7

சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து இடமாற்றுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக வைத்தியசாலை வளாகத்தில் நேற்றிரவு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து இடமாற்றம் செய்வதற்கான சுகாதார அமைச்சின் உத்தரவு கடிதம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரன நேற்று இரவு குறித்த கடிதத்தைப் பதில் வைத்திய அத்தியட்சகருக்கு வழங்க முற்பட்டுள்ளார்.

அதனைக் குறித்த வைத்திய அத்தியட்சகர் ஏற்க மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வைத்தியசாலை பதில் அத்தியட்சகரை கைது செய்யும் வகையில் வைத்தியசாலையில் சாவகச்சேரி பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

தான் மட்டுமே வைத்தியசாலையில் கடமையில் நிற்பதால் தன்னைக் கைது செய்து அழைத்துச் சென்றால், அந்தச் சமயத்தில் வைத்தியசாலையில் ஏதேனும், உயிரிழப்பு ஏற்பட்டால் தாமே பொறுப்பு என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாகப் பொது அமைப்புக்களினால் இன்றைய தினம் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here