வீரர்கள் இன்றி திரும்பிய விண்கலம்!

0
5

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இரண்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்களை ஏற்றிச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பியுள்ளது.

தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்ததால் இந்த விண்கலத்தின் மூலம் அவர்களைப் பூமிக்குக் கொண்டு வருவது பாதுகாப்பானதா என்ற சந்தேகம் எழுந்தது.

பின்னர் அந்த இரண்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் இன்னும் சில மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலே தங்கியிருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் விண்கலம்மூலம் பூமிக்குத் திரும்புவார்கள் என்று நாசா அறிவித்தது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நான்கு முறை பூமியை வந்தடையத் தாமதமான போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் இன்று (07) விண்வெளி ஆராய்ச்சியாளர்களின்றிப் பூமியை வந்தடைந்தது.

இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 2025ஆம் ஆண்டுப் பெப்ரவரி மாதமளவில் பூமிக்குத் திரும்பவார்கள் என நாசா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here