எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே ஆதரவளிப்பார்கள் என ஐக்கியச் சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கியத் தேசிய கட்சியின் பாணந்துறை அலுவலகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு,ஊடகங்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருந்த போது மக்களை அதிலிருந்து மீட்டு அவர்களது வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதில் ஜனாதிபதி அக்கறை செலுத்தி வருகின்றார். எனவே அடுத்தப் பதவிக் காலத்தையும் அவருக்கே வழங்க வேண்டும்.அதனாலேயே தாமும் ஜனாதிபதிக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்