எதிர்வரும் 17.01.2025 இல் முடிவடையவிருந்த 2024 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் பாடசாலை தவணை மேலும் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் மூன்றாம் தவணை மற்றும் 2024 கல்வியாண்டு 24.01.2025 அன்று முடிவடைகிறது.
அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில், மூன்றாம் தவணைப் பரீட்சை நடத்தி மாணவர்களுக்கு முன்னேற்ற அறிக்கைகள் வழங்க போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இதற்கான ஒத்திவிப்பு செய்யப்பட்டுள்ளது.
மூன்றாம் தவணை முடிவடையும் 24 ஆம் திகதிக்குள் பரீட்சைகளை நடத்தி முன்னேற்ற அறிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.