இன்று (17) காலை மாளிகாவத்தைப் பகுதியில் உள்ள ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் தீ விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உடன் விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தீ விபத்துச் சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், சொத்துச் சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.