புகைத்தல் மற்றும் மதுபான பாவனையினால் நாளாந்தம் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் (ADIC) இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் நாளாந்தம் 10ல் 8 பேர் தொற்றா நோய்களினால் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புகைப்பிடித்தல் மற்றும் மதுபான பாவனையே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாகச் சுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் நாட்டில் புகைத்தல் மற்றும் மதுபான பாவனைக்காக நாளொன்றில் சுமார் 121 கோடி ரூபாய்ச் செலவிடப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
அத்துடன் கடந்த 2022 ஆம் ஆண்டில் மது பாவனையினால் ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதார இழப்புகள் 237 பில்லியன் ரூபாய் எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.