2023 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 தை தாண்டியுள்ளதாகவும்
இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
2023 இல் டிசம்பர் 11 காலப்பகுதி வரையில் மொத்தம் (80,222) நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து (16,948 ) பதிவாகியுள்னர்.டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு தொற்றுநோயியல் பிரிவு கேட்டுக் கொள்கின்றது.