பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி இயங்கியதில் ஒருவர் பலி!

0
4

சீதுவப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடுகொட சோதனைச் சாவடியில் மகிழுந்து ஒன்றை, சோதனையிடச் சென்றவேளை, நபர் ஒருவர் காவல்துறை உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறிக்க முற்பட்ட போது துப்பாக்கி இயங்கியதில் அந்நபர் உயிரிழந்தார்.

சீதுவை பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சீதுவையில் இருந்து வந்த மகிழுந்தை சோதனையிட முற்பட்டுள்ளனர்.

இதன்போது மகிழுந்தின் இடது ஆசனத்தில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரின் கடமை நேர துப்பாக்கியைப் பறிக்க முற்பட்டுள்ளார்.

இந்தநிலையில், குறித்த துப்பாக்கி இயங்கியதால் காவல்துறை உத்தியோகத்தரின் காலிலும், அபகரிக்க முற்பட்ட நபரின் வயிற்றிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மகிழுந்தில் பயணித்த பூகொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் சீதுவப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here