பரீட்சையை நடத்த விசேட வேலைத்திட்டம்!

0
2

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் போது அனர்த்தங்கள் ஏற்பட்டால் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அனர்த்த நிலைமை காரணமாகப் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் துரித இலக்கமான 117 அல்லது 0113 668020, 0113 668100 மற்றும் 076 3 117 117 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நாளை மறுதினம் 2,849 நிலையங்களில் ஐந்தாம் தர புலமைப்பரீசில் பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here