பதவிகளை இராஜினாமா செய்த மனுஷ மற்றும் ஹரின்!

0
4

ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக மனுஷ நாணயக்காரவும், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், சுற்றுலா மற்றும் காணி அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும் பணியாற்றினர்.

இன்று (09) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்திய இருவரும், நீதிமன்றத்தின் தீர்ப்புத் தொடர்பில் தமக்கு எவ்வித வருத்தமும் இல்லை எனவும், அமைச்சர்களாகப் பதவி வகித்த காலத்தில் தங்களால் இயன்றளவு பொறுப்புக்களை நிறைவேற்ற முடிந்ததாகவும் தெரிவித்தனர்.

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தமையால் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here