சீனாவில் உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு டோ குரங்குகளை வழங்கும் திட்டம் வெற்றியடைந்திருந்தால், மற்ற நாடுகளும் டோ குரங்குகளைக் கோரியிருக்கும், இது இந்த விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தைக் குறைக்க உதவியிருக்கும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் பயிர்கள் குரங்குகளால் நாசம் செய்வதாகப் புகார்கள் அளித்ததை அடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.